×

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவர் கைது

அம்பை, செப்.24: அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் கணேசன்(59). இவரை மோசடி வழக்கில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து கணேசன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானர். நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதைதொடர்ந்து அம்பை போலீசார் பல்வேறு இடங்களில் அவரை தேடிவந்தனர். இந்நிலையில் போலீசார் நேற்று கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

The post நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவர் கைது appeared first on Dinakaran.

Tags : Ambai ,Ganesan ,Ambasamudra ,Ambai… ,
× RELATED வீரவநல்லூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்