×

பாடாலூர் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பாடாலூர் போலீசார் அதிரடி

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பாடாலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் நேற்றிரவு அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, சந்தேகப்படும் வகையில் நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் நிதியரசன் (19), வீரமணி மகன் மகேஸ்வரன்(22) என்பதும், அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து சுமார் 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

The post பாடாலூர் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பாடாலூர் போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Badalur ,Padalur ,Padalur police ,Pudukurichi ,Aladhur taluk ,Perambalur district ,Inspector ,Prabhu ,Dinakaran ,
× RELATED பாடாலூர் காவல் நிலையத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு