×

ஜம்மு எல்லையில் தீவிரவாத ஊடுருவல் முறியடிப்பு: பயங்கர ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்

ஜம்மு: ஜம்மு எல்லை வழியே நடக்க இருந்த தீவிரவாத ஊடுருவலை எல்லை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். ஜம்மு காஷ்மீரின் ஆர்எஸ் புரா எல்லை பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு எல்லையில் தடுப்பு வேலி அருகே சந்தேகத்துக்குரிய நபரின் நடமாட்டத்தை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டனர். இதையடுத்து அந்த நபர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து அந்த நபர் தப்பி ஓடி விட்டார்.

குறிப்பிட்ட அந்த பகுதியில் நேற்று காலை எல்லை பாதுகாப்பு படையினர் ஆய்வு நடத்தினர். அப்போது பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஒரு பை, சிகரெட் பாக்கெட்டுகள், ஏகே ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், சில பருவ இதழ்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் தீவிர தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

The post ஜம்மு எல்லையில் தீவிரவாத ஊடுருவல் முறியடிப்பு: பயங்கர ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Jammu border ,Jammu ,security ,Border Security Force ,Jammu and ,Kashmir ,RS Pura ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில்...