×

தாய், மகளை தாக்கி மிரட்டிய 3 பேர் கைது

முஷ்ணம், செப். 21: முஷ்ணம் அருகே தாய், மகளை தாக்கி மிரட்டல் விடுத்த 3 பேரை கைது செய்து ஒருவரை தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம், முஷ்ணம் அருகே பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி. இவரது வயல் அருகே ஜமீன் என்பவரின் வயல் உள்ளதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வயல் வழியாக மின்சார கம்பி செல்வது தொடர்பாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த எழிலரசி மகன் தமிழ்வாணன் என்பவரின் உறவினரான முத்தழகி, ராமுவின் மனைவி பிச்சம்மாளிடம் மாவட்ட கலெக்டருக்கு அளித்த புகார் மனு தொடர்பாக கேட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஜமீனிடம் ராமு தான், புகார் மனு எழுதிக் கொடுத்ததாக கருதிய தமிழ்வாணன் (28), மணிமாறன் (30) தாமரைச்செல்வன் (23), வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் கடந்த 19ம்தேதி, ராமு வீட்டை சேதப்படுத்தினர். மேலும் அவரது மகள் மற்றும் மனைவியை வழிமறித்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக சோழத்தரம் காவல் நிலையத்தில் ராமு புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ பாஸ்கர் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து மணிமாறன், தாமரைச்செல்வன், தமிழ்வாணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான வெங்கடேஸ்வரனை தேடி வருகின்றனர்.

இதனிடையே பிரச்னைக்குரிய இடத்தை பார்வையிட்ட மின்வாரிய அதிகாரி, விசாரணை நடத்திச் சென்ற நிலையில் மின்இணைப்பு துண்டிக்கப்படலாம் என்ற அச்சத்தில் எழிலரசி பூச்சிமருந்து குடித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் சிதம்பரம் ராஜா அண்ணாமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே அவரது வைக்கோல் போரை அடையாளம் தெரியாத நபர்கள் கொளுத்தினர். தகவல் கிடைத்து சேத்தியாத்தோப்பு தீயணைப்பு துறையினர் அங்குவந்து தீயை அணைத்தனர். மேலும் சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ரூபன்குமார் அங்குவந்து பார்வையிட்டார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post தாய், மகளை தாக்கி மிரட்டிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Mushnam ,Masilamani ,Perur ,Mushnam, Cuddalore district ,Zameen ,
× RELATED பவளவிழாவையொட்டி தலைஞாயிறு பேரூர் பகுதியில் திமுக கொடியேற்றம்