×

குளியலறையில் வழுக்கி விழுந்து பெண் பலி

தூத்துக்குடி,செப்.21: தூத்துக்குடி அருகே குளியல் அறையில் வழுக்கி விழுந்து பெண் பலியானார். தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சாந்திநகரைச் சேர்ந்தவர் மரிய அலங்காரம் மனைவி அந்தோணியம்மாள் (56), இவர் தனது வீட்டில் குளியல் அறையில் வழுக்கி விழுந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குளியலறையில் வழுக்கி விழுந்து பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Antoniyammal ,Mariya Ankaram ,Pudukottai Shantinagar ,
× RELATED தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணி