×

திண்டுக்கல்லில் கொள்ளைக்கு ‘ஸ்கெட்ச்’ விழுப்புரம் நபர்கள் ஆயுதங்களுடன் கைது

திண்டுக்கல், செப். 21: திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அமுதா தலைமையில், எஸ்ஐ பாலசுப்ரமணியன் மற்றும் போலீசார் தோமையார்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முனியப்பன் கோயில் அருகே சந்தேகப்படும்படியாக அமர்ந்து இருந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் களத்து மேட்டு தெருவை சேர்ந்த செந்தில் (31), முரளி (34) என்பதும், அவர்களிடம் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததும், அதனை வைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post திண்டுக்கல்லில் கொள்ளைக்கு ‘ஸ்கெட்ச்’ விழுப்புரம் நபர்கள் ஆயுதங்களுடன் கைது appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Taluk Inspector ,Amutha ,SI ,Balasubramanian ,Thomaiyarpuram ,Muniappan temple ,Dindigul Villupuram ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி புட் நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு!