×

கொல்லம் அருகே இன்று அதிகாலையில் மினி பஸ் மீது மீன் லோடு வாகனம் மோதி விபத்து: குமரி மீனவர் உட்பட 4 பேர் மரணம்; 24 பேர் படுகாயம்

நாகர்கோவில்: கேரள மாநிலம் கொல்லம் அருகே இன்று அதிகாலை நடைபெற்ற விபத்தில் குமரி மாவட்ட மீனவர் உட்பட 4 பேர் பலியாகினர். 24 பேர் படுகாயம் அடைந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊர் வந்த மீன்பிடி தொழிலாளர்கள் மீண்டும் மீன்பிடி தொழிலுக்காக புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். இதில் குமரி மாவட்டம் குளச்சலில் இருந்து நேற்று மாலையில் ‘ஸ்ரீகணபதி’ என்று பெயரிடப்பட்ட ஒரு மினி பஸ்சில் மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக கேரளா மாநிலம் புறப்பட்டனர். இவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே புல்லுவிளை சென்ற பின்னர் அங்கிருந்தும் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இருந்து கோழிக்கோடு மாவட்டம், பேப்பூருக்கு சென்றுகொண்டிருந்தனர். மினி பஸ்சில் டிரைவர் உட்பட மொத்தம் 35 பேர் இருந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் கொல்லம் அருகே சவறை என்ற இடத்தில் இன்று அதிகாலை 12.40 மணியளவில் மினி பஸ் சென்றுகொண்டிருந்தபோது திருவனந்தபுரம் நோக்கி மீன் லோடு ஏற்றிக்கொண்டு வந்த கண்டெய்னர் வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. முன்னதாக மற்றொரு வாகனத்தில் மோதிய மீன் லோடு வாகனம் பின்னர் கட்டுப்பாட்டை இழந்து மீனவர்கள் சென்றுகொண்டிருந்த மினி பஸ் மீது பின்னர் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் இரண்டு வாகனங்களும் சாலையில் சரிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் போலீசார், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்த விபத்தில் திருவனந்தபுரம், புல்லுவிளையை சேர்ந்த கருணாம்பரம், பெர்க்மான்ஸ், விழிஞ்ஞம் ஜஸ்டின், குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த பிஜூ ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த விழிஞ்ஞத்தை சேர்ந்த ரோயி, குளச்சல் பகுதியை சேர்ந்த வர்க்கீஸ் ஆகியோர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் லேசாக காயமடைந்த 22 பேர் கொல்லம், கருநாகப்பள்ளி தாலுகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து நடப்பதற்கு சற்று முன்னர்தான் மினி பஸ்சில் சென்ற மீனவர்கள் வாகனத்தை நிறுத்தி உணவு சாப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் மினி பஸ்சில் ஏறியுள்ளனர். பஸ் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியுள்ளது. அதனால் யாரும் தூக்க கலக்கத்தில் இருக்கவில்லை என்றும் விபத்தில் சிக்கியவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்….

The post கொல்லம் அருகே இன்று அதிகாலையில் மினி பஸ் மீது மீன் லோடு வாகனம் மோதி விபத்து: குமரி மீனவர் உட்பட 4 பேர் மரணம்; 24 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Fish Load ,Kollam ,Nagarko ,Kerala ,Kumari district ,Fish Lode ,Kumari Fisherman ,Dinakaran ,
× RELATED சென்னையிலிருந்து கொல்லம் விரைவு...