×
Saravana Stores

மருதாநதி அணையில் இன்று தண்ணீர் திறப்பு

சென்னை, செப். 20: தமிழ்நாடு நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: அய்யம்பாளையம், மருதாநதி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று (செப்.20ம் தேதி) முதல் 120 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டிற்கு விநாடிக்கு 20 கனஅடியும், முதல் 30 நாட்களுக்கு மறைமுக மற்றும் புதிய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 70 கனஅடியும் என மொத்தம் 90 கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 6583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

The post மருதாநதி அணையில் இன்று தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Marudhanadi Dam ,Chennai ,Tamil Nadu Water Resources Department ,Additional ,Chief Secretary ,Ayyambalayam ,Marudhanadi reservoir ,Ayakatta ,
× RELATED விசுவேசுவரய்யா அறக்கட்டளை சார்பில் பொறியாளர் தின சொற்பொழிவு