×

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: செங்குன்றத்தில் கஞ்சா கடத்திய நபருக்கு 12 ஆண்டுசிறை தண்டனை விதித்து, போதைப் பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை செங்குன்றத்தில், கடந்த ஆண்டு மார்ச் மாதம், கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு நின்றிருந்த சென்னை மின்ட் பகுதியை சேர்ந்த னிவாசன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 23.600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை போதைப் பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.திருமகள் முன்பு நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜரானார். அப்போது, தன் மீதான குற்றச்சாட்டை னிவாசன் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

The post கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Sengunram ,Dinakaran ,
× RELATED செங்குன்றம் பகுதியில் குண்டும்...