×

தாவரவியல் பூங்காவில் ‘குயின் ஆப் சைனா’ மலர்கள் பூத்திருச்சு: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் பூத்துக் குலுங்கும் சீனாவின் அரசி எனப்படும் (குயின் ஆப் சைனா) பவுலோனியா பார்சினி மலர்கள் தற்போது ஊட்டி தாவரவியில் பூங்காவில் பூக்கத்துவங்கியுள்ளது. சீனாவின் அரசி என பவுலோனியா பார்சினி என்ற வகை மலர்கள் அழைக்கப்படுகிறது. இவை மரங்களில் பூக்கக்கூடியவை. இவை சீன நாட்டில் அதிகளவு உள்ளன. இந்த மரங்கள் அங்கு பல்வேறு சாதனங்கள் செய்வதற்காக வளர்க்கப்படுகிறது. குளிர் காலத்தில் (டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) இந்த மரம் முழுவதும் உள்ள கிளைகளில் மலர்கள் பூத்துக் குலுங்கும். பார்ப்பதற்கு மரமே வெள்ளை நிறம் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனை, சீன மக்கள் குயின் ஆப் சைனா என்று அழைக்கின்றனர்.இவ்வகை மரங்கள் இந்தியாவில் அரிதாகவே காணப்படுகிறது.  ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஒரே ஒரு மரம் மட்டுமே உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் சீனாவில் இருந்து இம்மரம் கொண்டு வரப்பட்டு தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் மலர்கள் பூத்துக் குலுங்கும். ஆனால், இம்முறை கடந்த வாரம் வரை மழை பெய்த நிலையில், பனிப்பொழிவு குறைந்து காணப்பட்டது. இதனால், பனி காலத்தில் பூக்கும் இந்த மரங்களில் மலர்கள் பூக்காமல் இருந்தது. மரம் முழுவதும் மொட்டுக்களே காணப்பட்டது. தற்போது மழை குறைந்த கடந்த ஒரு வாரமாக பனி விழத்துவங்கியுள்ளது. இதனால், இம்மரத்தில் ஒரு சில கிளைகளில் மட்டும் பூக்கள் பூக்கத் துவங்கியுள்ளன. எனினும், அரிதாக காணக் கிடைக்கும் இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்….

The post தாவரவியல் பூங்காவில் ‘குயின் ஆப் சைனா’ மலர்கள் பூத்திருச்சு: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.

Tags : Botanical Park ,Quin of China ,Paulownia Barcini ,China ,Qin ,
× RELATED பராமரிப்பு பணி முடிந்து தாவரவியல்...