×

வெளிநாடுகளில் இப்படி பேசுவது தொடர்ந்தால் உங்க பாட்டி கதைதான் உங்களுக்கும்: ராகுல்காந்திக்கு பா.ஜ தலைவர் பகிரங்க மிரட்டல்

புதுடெல்லி: அமெரிக்கா சுற்றுப்பயணம் செய்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, இந்தியாவில் தற்போதுள்ள நடைமுறை குறித்தும், பா.ஜ ஆட்சி குறித்தும் விமர்சனம் செய்தார். இதற்கு பா.ஜ தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் சீக்கியர்களை அவமானப்படுத்திவிட்டதாக கூறி டெல்லியில் சோனியாகாந்தி இல்லம் முன்பு பா.ஜ சீக்கியர் பிரிவு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தநிலையில் பா.ஜ சீக்கியர் பிரிவு உறுப்பினர் தர்வீந்தர் சிங் மார்வா திடீரென ராகுல்காந்தியை பகிரங்கமாக மிரட்டி பேசுவது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜ தலைவர் தர்விந்தர் சிங் மார்வா அந்த வீடியோவில்,’ராகுல் காந்தி, இதுபோன்ற விஷயங்களைத் பேசுவதை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் வரும் காலத்தில், உங்கள் பாட்டிக்கு(முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி) ஏற்பட்ட கதியை நீங்களும் சந்திக்க நேரிடும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மக்களவை எதிர்க்கட்சி தலைவராக உள்ள ராகுல்காந்தியை, அவரது பாட்டி இந்திராகாந்தியை கொன்றது போல் கொல்லப்போவதாக பகிரங்கமாக மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

The post வெளிநாடுகளில் இப்படி பேசுவது தொடர்ந்தால் உங்க பாட்டி கதைதான் உங்களுக்கும்: ராகுல்காந்திக்கு பா.ஜ தலைவர் பகிரங்க மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Rahul Gandhi ,New Delhi ,Lok Sabha ,America ,India ,Sonia Gandhi ,Delhi ,
× RELATED ராகுலுக்கு எதிராக தொடர் சர்ச்சை...