×

கணவரை பிரிந்த நிலையில் 5 வருசத்துக்கு யாருடனும் ‘டேட்டிங்’ கிடையாது: நடிகை பூனம் பாண்டே அறிவிப்பு

மும்பை: பாலிவுட் ஆபாச நடிகை பூனம் பாண்டேவுக்கும் அவரது கணவர் சாம் பாம்பேய்க்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக குடும்ப சண்டை ஏற்பட்டது. தலையில்  காயமடைந்த பூனம் பாண்டே தற்போது மும்பையில் எடுத்து வருகிறார். அவரது கணவர்  சாம் பாம்பே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை விமானத்தில் காணப்பட்ட பூனம் பாண்டே, டெலி டாக்கில் பேசுகையில், ‘அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யாருடனும் நான் டேட்டிங் செய்யப் போவதில்லை. எனக்கு திருமதி அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால், சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட விக்கி கவுஷல் –  கத்ரீனா கைஃப்பின் காதல் திருமணம் போல் இருக்க வேண்டும். எனது ரோல் மாடல் கத்ரீனா கைஃப் தான். அவர், தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ளார். எல்லோரும் அவரை நேசிக்கிறார்கள்; நானும் அவரை போன்று மிகவும் கடினமாக உழைத்து முன்ேனறுவேன். சரியான நபரை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்….

The post கணவரை பிரிந்த நிலையில் 5 வருசத்துக்கு யாருடனும் ‘டேட்டிங்’ கிடையாது: நடிகை பூனம் பாண்டே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Poonam Pandey ,Mumbai ,Sam Pompey ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!