×

சீர்காழியில் 22 பள்ளிகளை சேர்ந்த 700 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு

 

சீர்காழி,செப்.13: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி நகராட்சி மேல்நிலைப்பள்ளி வாணி விலாஸ் உதவி பெறும் தொடக்கப்பள்ளி சட்டநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சியாமளா பெண்கள் மேல்நிலைப்பள்ளி எல்எம்சி மேல்நிலைப்பள்ளி,

எழில் மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சுபம் வித்யா மந்திர் பள்ளி, சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 22 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களின் சேவையை பாராட்டு விதமாக தொண்டு நிறுவனமான சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ஒவ்வொரு பள்ளிக்கும் நேரடியாக சென்று ஆசிரியர்களை கவுரவித்து 700 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி உதவி ஆளுநர் பாலாஜி, தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் வினோத், பொருளாளர் நாகமுத்து, நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கோவி நடராஜன், பாலமுருகன், ஆறுமுகம், கார்த்திகேயன், வெங்கடேசன், சொர்ணபால், சரவணன், முரளி, விஜயன், வீரபாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post சீர்காழியில் 22 பள்ளிகளை சேர்ந்த 700 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Teacher's Day ,Mayiladuthurai District ,Sirkazhi Sabanayaka Mudaliar Hindu Higher Secondary School ,Municipal Higher Secondary School ,Vani Vilas Aided Primary School ,Chattanathpuram Panchayat Union Middle School ,Syamala Girls' Higher Secondary School ,LMC Higher Secondary School ,Eghil ,
× RELATED பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்