×

நெல்லையில் செப்.13ல் கூட்டுறவு பணியாளர் குறைதீர் முகாம்

 

நெல்லை, செப்.11: நெல்லையில் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைதீர் முகாம் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது என மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன் தெரிவித்தார். திருநெல்வேலி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் வரவு செலவு திட்டம் 2024-2025ம் ஆண்டு கூட்டுறவுத்துறைக்கான 27.06.2024 அன்று நடைபெற்ற மானிய கோரிக்கையின் போது கூட்டுறவுத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் அறிவிப்பு எண்:3ல் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்திடும் வகையில், இருமாதங்களுக்கு ஒருமுறை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மாதத்தின் 2வது வெள்ளிக்கிழமை அன்று நடைபெறயுள்ளது.

இதன் அடிப்படையில் நெல்லை மண்டலத்தில் வரும் 13ம் தேதி (வெள்ளிக்கிழமை) எண் 1, மெஞ்ஞானதெரு, பாளையங்கோட்டை முகவரில் இயங்கிவரும் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இம்முகாமில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் தங்களது பணி தொடர்பாகவும், பணியின்போது அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகள் தொடர்பாக மனுக்களை அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post நெல்லையில் செப்.13ல் கூட்டுறவு பணியாளர் குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Nella ,Murukesan ,Tirunelveli Region Cooperative Associations ,Tamil Nadu ,-operative Worker Muchadeer Camp ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சஞ்சய் என்ற 3 வயது சிறுவன் கொலை..!!