×

அசாமில் புதிய ஆதாருக்கு என்ஆர்சி எண் கட்டாயம்


கவுகாத்தி: அசாமில் புதிய ஆதாருக்கு விண்ணப்பிப்போர் தங்கள் என்ஆர்சி விண்ணப்ப ரசீது எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில்,’ அசாம் மாநிலத்தில் ஆதார் அட்டைக்கான விண்ணப்பங்கள் மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது. இது அசாம் மாநிலத்தில் சந்தேகத்துக்குரிய குடிமக்கள் இருப்பதை காட்டுகிறது.

எனவே, புதிதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களின் என்ஆர்சி விண்ணப்பத்துக்கான ரசீது எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இது சட்டவிரோத வௌிநாட்டினர் வருகையை தடுக்கும். அசாமில் ஆதார் பெறுவது எளிதானதல்ல. ஆதார் அட்டை தருவதில் மாநில அரசு மிகக்கடுமையாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

The post அசாமில் புதிய ஆதாருக்கு என்ஆர்சி எண் கட்டாயம் appeared first on Dinakaran.

Tags : NRC ,Aadhaar ,Assam ,Guwahati ,Chief Minister ,Himanta Biswa Sharma ,Dinakaran ,
× RELATED இலவச மனைப்பட்டா வழங்காததால் மக்கள்...