×

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ‘பாண்டிச்சேரி சரக்கு’ பறிமுதல்

 

சாத்தூர், செப்.6:விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள பெரியவள்ளிகுளத்தில் வீட்டில் வைத்து மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக சாத்தூர் மதுவிலக்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளர் சித்திரகலா தலைமையிலான போலீசார் வீரராஜ்(57) என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு பதுக்கி வைத்திருந்த 250 புதுச்சேரி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவற்றை புதுச்சேரியில் இருந்து லாரி மூலம் கடத்தி வந்தது தெரியவந்தது.

 

The post வீட்டில் பதுக்கி வைத்திருந்த ‘பாண்டிச்சேரி சரக்கு’ பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chatur ,Chattur Prohibition Police ,Periyavallikulam ,Arupukottai Road, Virudhunagar ,Inspector ,Chitrakala ,Veeraraj ,Dinakaran ,
× RELATED போதை பொருள் கடத்தலை தடுக்க மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கை