×

காதலி போன் எடுத்து பேசாத விரக்தி: காதலன் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு பெரம்பூர் பேரக்ஸ் ரோடு கே.எம்.கார்டன் 8வது தெரு பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மகன் பீட்டர் ஜான்  (27). திருமண வரவேற்பு, பிறந்தநாள் நிகழ்ச்சி போன்றவற்றுக்கு டெக்கரேஷன் செய்யும் வேலை செய்து வந்தார்.  இவர், புளியந்தோப்பு டோபிகண்ணா பகுதியை சேர்ந்த  இளம்பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை, வீட்டில் பாத்ரூம் சென்ற பீட்டர் ஜான்,  வெகு நேரமாகியும் வெளியில் வரவில்லை. சந்தேகமடைந்த அவரது தம்பி ஷாம், கதவை தட்டியுள்ளார். திறக்காததால் உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பீட்டர் ஜான்  தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதார். தகவலறிந்து புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பீட்டர் ஜான் கடந்த 3 வருடங்களாக அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று பலமுறை காதலிக்கு போன் செய்துள்ளார். எடுக்காததால்  விரக்தியடைந்த பீட்டர் ஜான் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்….

The post காதலி போன் எடுத்து பேசாத விரக்தி: காதலன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Perampur ,Chennai Pleyanthopu ,Perampur Berracks Road ,K. MM Aruldas ,8th Street ,Peter ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு