×

கொடநாடு வழக்கு – வங்கிகளுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, வங்கிகளுக்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொடநாடு வழக்கில் தொடர்புடைய சயான், வாளையாறு மனோஜ், பிஜின் குட்டி உள்ளிட்ட 12 பேரின் வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 12 பேரின் வங்கி கணக்கிலும் 2017 ஏப்ரல் முதல் தற்போது வரை நடைபெற்றுள்ள பரிவர்த்தனை விவரங்களை வழங்க கோரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது. அவர்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களின் வங்கி பரிவர்த்தனை விவரங்களையும் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post கொடநாடு வழக்கு – வங்கிகளுக்கு சிபிசிஐடி நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : CBCID ,Nilgiris ,Koda Nadu ,Sayan ,Valayaru Manoj ,Bijin Kutty ,Kodanad ,Dinakaran ,
× RELATED கொடநாடு வழக்கு: ஜாமினில் உள்ள 12 பேரின்...