×

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி விசைப்படகுடன் சிறைபிடித்தது இலங்கை கடற்படை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை காலை 167 விசைப்படகுகளில் சுமார் 800க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில், அங்கே வந்த இலங்கைக் கடற்ப்படையினர், அத்துமீறி எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி விசைப்படகு (எண்: 08-1418) மற்றும் அதில் சென்ற மீனவர்கள் தினேஷ், முரளி, செல்வம்,விஸ்வநாதன் உள்ளிட்ட ஒன்பது மீனவர்களை இலங்கை கடற்ப்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை முகத்திற்க்கு அழைத்துச் சென்று விசாரணை நடைபெற்று வருகிறது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் இலங்கை கடற்ப்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைபிடித்த மீனவர்களையும் படகையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி விசைப்படகுடன் சிறைபிடித்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Pudukkottai ,Pudukkottai District ,Kotipatnam ,Sri Lanka Navy ,Dinakaran ,
× RELATED மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு!