×

பாரா ஒலிம்பிக்; இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டின் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!!

சென்னை: உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டின் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இதுவரை பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பாரா ஒலிம்பிக்கில் 3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குறியாகவாது, பாரிஸ் நகரில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டின் தங்கமகன் திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ள தாங்கள், மேலும் பல சிகரங்களைத் தொட்டு நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post பாரா ஒலிம்பிக்; இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டின் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Para Olympics ,Edappadi Palaniswami ,Tamil Nadu ,Thangaman ,Mariappan Thangavelu ,India ,Chennai ,Mariyappan Thangavelu ,Paralympic Games ,Paris ,France ,
× RELATED பாரா ஒலிம்பிக்ஸ்: சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு