பெரம்பூர்: பெரம்பூர் சின்னையா நியூ காலனி 4வது தெருவை சேர்ந்த 4ம் வகுப்பு மாணவி நேற்று முன்தினம் பெரம்பூர் வடிவேல் தெருவில் உள்ள டியூஷன் சென்டருக்கு சென்றார். அங்கிருந்து, காலை 8 மணிக்கு வீட்டிற்கு நடந்து சென்றபோது, காரில் வந்த நபர், மாணவியிடம் முகவரி கேட்டுள்ளார். பின்னர், உன்னை வீட்டில் விட்டுவிடுகிறேன், எனக்கூறியுள்ளார். அதை நம்பி மாணவியும் காரில் ஏறியுள்ளார். சிறிது நேரத்தில், அந்த நபர் வேறு வழியாக காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இதனால், மாணவி அலறி கூச்சலிட்டார். இதையடுத்து, காரை நிறுத்தி மாணவியை இறக்கி விட்டு தப்பியுள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமராவில் பதிவான காரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர். அதில், வியாசர்பாடி மேயர் கிருஷ்ணமூர்த்தி நகர் 1வது தெருவை சேர்ந்த துரைபாபு (35) என்பவர் மாணவியை கடத்த முயன்றது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்….
The post டியூசனுக்கு சென்று திரும்பிய மாணவியை கடத்த முயற்சி: கார் டிரைவர் கைது appeared first on Dinakaran.