×

நீதிபதி ஓய்வு பெற்றபின் தீர்ப்பு பதிவேற்றம் உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து கடந்த 2017 மே 26ம் தேதி ஓய்வு பெற்றவர் நீதிபதி டி.மதிவாணன். இவர் ஓய்வு பெறும் முன்பு ஒரு கிரிமினல் வழக்கில் ஒரு வரியில் தீர்ப்பு வழங்கினார். அதன்பின் அந்த தீர்ப்பு முழுவிவரத்தையும் ஐந்து மாதம் கழித்து வெளியிட்டார். அந்த தீர்ப்பு 2017 அக்டோபர் 23ம் தேதி வெளியானது. இதையடுத்து இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த தீர்ப்பை ரத்து செய்திருந்தது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு ,‘‘நீதிபதி ஓய்வு பெற்றதற்கு பிறகு 9 வழக்குகளில் விரிவான தீர்ப்பு பதிவேற்றம் செய்யப்பட்டது தவறானது. இது குறித்த விரிவான அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

 

The post நீதிபதி ஓய்வு பெற்றபின் தீர்ப்பு பதிவேற்றம் உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,High Court ,NEW DELHI ,JUDGE ,T.D. ,CHENNAI ,COURT ,MATIWANAN ,High Court Registrar ,Dinakaran ,
× RELATED ஜாபர் சேட்டுக்கு எதிரான வழக்கை...