×

அன்னவாசல் பகுதியில் இன்று மின் விநியோகம் நிறுத்தம்

 

விராலிமலை,செப்.3: அன்னவாசல், அண்ணா பண்ணை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (3ம்தேதி) மின் விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அன்னவாசல் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அன்னவாசல் பேரூராட்சி பகுதி, செங்கப்பட்டி, காலாடிபட்டி, முக்கண்ணாமலைபட்டி, புதூர், தச்சம்பட்டி, வெள்ளஞ்சார், கீழக்குறிச்சி, சித்தன்னவாசல், பிராம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இதேபோல், அண்ணா பண்னை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வயலோகம், மண்ணவேளாம்பட்டி, மாங்குடி, அண்ணா பண்னை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரபட்டி, பின்னங்குடி, விசலூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.

The post அன்னவாசல் பகுதியில் இன்று மின் விநியோகம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Annavasal ,Viralimalai ,Electricity Board ,Anna Farma ,Dinakaran ,
× RELATED விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் பகுதி பள்ளிகளில் ஆசிரியர் தின விழா