×

கனரக வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்க கோரிக்கை

 

கரூர், ஆக. 31: கரூர் ‘லைட்ஹவுஸ் கார்னர்’ பகுதியில் இருந்து பிஎஸ்என்எல் அலுவலகம், மார்க்கெட், மாரியம்மன் கோயில், ஜவஹர் பஜார் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ‘மக்கள் பாதை’ வழியாக செல்கின்றன. இருவழிப் போக்குவரத்து நடைபெற்று வரும் மக்கள் பாதையோரம் அடிக்கடி கனரக வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால், வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ‘மக்கள் பாதை’ பகுதியில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதைக் கண்காணித்து, அதைத் தடுக்க வேண்டும் என இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கனரக வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karur ,Aga ,Lighthouse Corner ,BSNL ,Maryamman Temple ,Jawahar Bazaar ,People's Path ,Dinakaran ,
× RELATED கரூர் விளையாட்டு மைதான சாலையில்...