×

பூலித்தேவரின் 309வது பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு!

தென்காசி: பூலித்தேவரின் 309வது பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் செப்.2 காலை 10 மணி வரை தடை உத்தரவு என ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். வாள், கத்தி, லத்தி, கற்கள் போன்ற ஆட்சேபனைக்குரிய பொருட்களுடன் வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 4 நபர்களுக்கு மேல் கூடி நின்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மாமன்னர் பூலித்தேவனின் 309-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் நாளை (ஆக.31) மாலை 6 மணி முதல் செப். 2ம் தேதி காலை 10 மணி வரை பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா சட்டப்பிரிவு 163 (1)-ன் படி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு அறிவிப்பின் படி, 4 நபர்களுக்கு மேல் கூடி நின்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

The post பூலித்தேவரின் 309வது பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Tenkasi District ,Poolitevar ,TENKASI ,BIRTHDAY EVENT ,BULITEWAR ,Ruler Kamal Kishore ,
× RELATED செங்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்து...