×

நாமக்கல்லில் இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

நாமக்கல், ஆக.30: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலும், மாவட்ட அளவிலும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், இன்று (30ம் தேதி) காலை 10.30 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் இடுபொருட்கள் இருப்பு விபரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து தீர்வு பெறலாம். இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post நாமக்கல்லில் இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Uma ,Dinakaran ,
× RELATED புகை மருந்து அடிக்கும் பணி