×

நாசரேத் கல்லூரியில் ரத்த தான முகாம்

நாசரேத், ஆக. 30: நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் புனித லூக்கா மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளரும், கல்லூரி செயலாளருமான பிரேம்குமார் ராஜாசிங் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜீவி எஸ்தர் ரெத்தினகுமாரி வரவேற்றார். முகாமில் 54 மாணவ -மாணவிகள் ரத்த தானம் செய்தனர். இதில் கல்லூரி நிதியாளர் சுரேஷ் ஆபிரகாம், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ராஜாசிங் ஹேரிஸ்டன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி செயலர் பிரேம்குமார் ராஜாசிங் தலைமையில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சாந்திசலோமி, சீயோன்செல்லரூத், பியூலா ஹேமலதா மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

The post நாசரேத் கல்லூரியில் ரத்த தான முகாம் appeared first on Dinakaran.

Tags : Blood Donation ,Camp ,Nazareth ,College ,Nazareth Markashis College National Welfare Program ,St. Luke's Hospital ,Premkumar Rajasingh ,Nazareth Matrimonial High and Higher Secondary Schools ,Thoothukudi ,Blood ,Donation Camp ,Nazareth College ,Dinakaran ,
× RELATED சேதுபாஸ்கரா வேளாண் கல்லூரியில் ரத்ததான விழிப்புணர்வு முகாம்