- ஜனாதிபதி
- இந்திய ஹஜ் சங்கம்
- ஹஜ் சங்கத்தின் தலைவர்
- இந்தியா
- கிறிஸ்துமஸ்
- சென்னை
- ஜனாதிபதி
- ஜனாதிபதி ஜனாதிபதி
- அபூபக்கர்
- தலைவர் ஹஜ் சங்கத்தின் தலைவர் தலைவர்
- இந்தியா
சென்னை: இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: உலகில் வாழும் பல நூறு கோடி மக்கள் கொண்டாடும் பண்டிகைகள் எத்தனையோ இருந்தாலும் சிறப்பு வாய்ந்தது கிறிஸ்துமஸ் திருநாள்!. ஒட்டுமொத்த உலகப் பந்தில் பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமானது கிறிஸ்துமஸ்!. இந்த நன்னாளில் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பையும்,சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் பேணிக்காக்க வேண்டியது மிக மிக அவசியம். அன்பு,கருணை,நீதி, சமாதானம் அனைத்தும் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற மிகப்பெரிய நீதி மொழியை கற்றுத் தந்தவர் இயேசுபிரான். உன்னைப்போல் பிறரையும் நேசி என்ற ஒற்றை வாக்கியம் உலகமே உற்று கவனிக்க வேண்டியதாய் இன்றளவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. உலகம் ஒரு பெருந்தொற்றை கடந்து விட்டோம் என்று நினைத்திருந்த நிலையில் மீண்டும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி கொண்டிருக்கிறோம். எனவே இந்த நன்னாளில் அரசின் வழிமுறைகளை பின்பற்றி அனைவரும் பாதுகாப்பாக இந்த நன்னாளை கொண்டாடுவோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியால் நோய்த்தொற்று கட்டுக்குள் வந்து தமிழகம் தற்போது கொஞ்சம் நிமிர ஆரம்பித்திருக்கிறது. மீண்டும் வரும் அச்சுறுத்தலில் இருந்து நம்மை தமிழக அரசு காத்துக்கொள்ளும். அதற்கான இறையருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …
The post கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வாழ்த்து appeared first on Dinakaran.