×

ஆந்திராவில் ஒரே நாளில் இருவேறு கார் விபத்தில் குழந்தை உட்பட 8 பேர் பலி

*6 பேர் படுகாயம்

திருமலை : தனித்தனியாக நடந்த கார் விபத்துகளில் குழந்தை உட்பட 8 பேர் இறந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் பகத்சிங் (35). இவர் தனது தாய் நாகலட்சுமி (70), மனைவி, 1 மாத குழந்தை உட்பட 8 பேருடன் திருப்பதி கோயிலுக்கு நேற்றுமுன்தினம் காரில் சென்றார். காரை பகத்சிங் ஓட்டினார். கடப்பா மாவட்டம் சிந்தகுண்டா அடுத்த பயனாபள்ளி வழியாக சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், நடுரோட்டில் பல்டி அடித்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் நாகலட்சுமி, பகத்சிங் மற்றும் அவரது 1 மாத குழந்தை ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மைதுக்கூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த கடப்பா போலீசார் சம்பவ இடம் சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் கடப்பா மாவட்டம் ராயச்சோட்டியை சேர்ந்தவர் நாகைய்யா(46). இவரது உறவினர் ஒருவரின் ஈமச்சடங்கில் பங்கேற்க தனது குடும்பத்தினரான சின்னவெங்கடம்மா (50), நாகலட்சுமிதேவி (35) ஆகியோருடன் நேற்றுமுன்தினம் கடப்பா நோக்கி காரில் சென்றனர். காரை அதேபகுதியை சேர்ந்த ஷெரீப் (38) என்பவர் ஓட்டினார். குவ்வளச்செருவு மலைப்பாதையில் சென்றபோது எதிரே வந்த கன்டெய்னர் லாரி திடீரென இவர்களது கார் மீது மோதியது.

இந்த விபத்தில் சின்னவெங்கடம்மா, நாகைய்யா, நாகலட்சுமிதேவி மற்றும் டிரைவர் ஷெரீப் ஆகியோர் அதே இடத்தில் இறந்தனர். மேலும் கார் மீது மோதிய கன்டெய்னர் லாரி, அருகில் உள்ள சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கன்டெய்னர் டிரைவர் இடிபாடுகளில் சிக்கி பலியானார். அவருடன் இருந்த கிளீனர் படுகாயமடைந்தார். அவர்களது பெயர், விவரம் தெரியவில்லை.இதுகுறித்து தகவலறிந்த கடப்பா தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆந்திராவில் ஒரே நாளில் இருவேறு கார் விபத்தில் குழந்தை உட்பட 8 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Padukayam Tirumala ,Bhagatsingh ,Kurnool, Andhra Pradesh ,Nagalakshmi ,
× RELATED கூலிப்படை தலைவனாக செயல்பட்டு வந்த...