×

சுங்கான்கடையில் முதியவர் திடீர் மாயம்

திங்கள்சந்தை, ஆக.28: சுங்கான்கடை திருமலைநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையன் (70). கடந்த 19ம் தேதி காலை சுங்கான்கடை ஜங்ஷனுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. காணாமல் போன அன்று வேட்டி சட்டை அணிந்து இருந்தார். இது குறித்து அவரது மகன் சுரேஷ்(39) இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன முதியவரை தேடி வருகின்றனர்.

The post சுங்கான்கடையில் முதியவர் திடீர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Subhaiyan ,Sungankadai Tirumalanagar ,Sungankadai Junction ,
× RELATED குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் தொழில்நுட்ப முறைகளை கையாள வேண்டும்