×

ஆழ்கடலில் மீனவர் பலி

தண்டையார்பேட்டை: ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராவ் (40), மீனவர். இவர் கடந்த 10ம் தேதி ஜெயபிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 6 பேருடன் சென்றார். இந்நிலையில் மீன்பிடிக்கும் போது ராஜாராவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

மேலும் திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். சக மீனவர்கள், கடந்த 26ம் தேதி காசிமேடு மீன்பிடி துறைமுகம் வந்து, மீன்பிடி துறைமுக போலீசில் புகார் செய்தனர். அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராவ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்னர். மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post ஆழ்கடலில் மீனவர் பலி appeared first on Dinakaran.

Tags : Fisherman ,Thandaiyarpet ,Rajarao ,Srikakulam, Andhra Pradesh ,Jayaprakash ,Rajara ,
× RELATED சென்னை துறைமுகத்தில் அந்தரத்தில்...