×

ஆவணி மாத கார்த்திகையை முன்னிட்டு வைத்தீஸ்வரன்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

சீர்காழி, ஆக.27: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் வைத்தியநாதசுவாமி தையல் நாயகி அம்பாள் உடனாகிய திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு தனி சன்னதியில் நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் அருள் பாலித்து வருகிறார். 18 சித்தர்களில் முதன்மையான தன்வந்திரி சித்தர் இக்கோயிலில் ஜீவசமாதி அடைந்துள்ளார். இக்கோயிலில் அமைந்துள்ள சித்தாமிர்த தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால் 4448 நோய்கள் தீரும் என்பது ஐதீகம். இக்கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து தினந்தோறும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

புகழ்பெற்ற வைத்தீஸ்வரன்கோயிலில் ஆவணி மாத கார்த்திகையை முன்னிட்டு காலை வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்பாள், அங்காரகன் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து செல்வ முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானையுடன் கார்த்திகை மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்பு தருமபுர ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் முன்னிலையில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

அப்போது ஏராளமான பக்தர்கள் மற்றும் தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தருமபுர ஆதீனம் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். ஏற்பாடுகளை கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

The post ஆவணி மாத கார்த்திகையை முன்னிட்டு வைத்தீஸ்வரன்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Swami ,Vaideeswaran temple ,Avani month ,Kartika ,Sirkazhi ,Vaidyanathaswamy ,Ambal ,Mayiladuthurai district ,Mars ,Dhanvandri Siddhar ,Swami Swami ,Karthikai ,
× RELATED கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத...