×

வெள்ளகோவில், பல்லடம் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

 

திருப்பூர், ஆக. 27: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் இன்று (27ம் தேதி) ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் ஊத்துக்குளி ஆர்.எஸ் ஊத்துக்குளி ஒன்றிய திருமண மண்டபத்தில் அணைப்பாளையம், பல்லவராயன்பாளையம், எஸ்.கத்தாங்கன்னி, இச்சிபாளையம், வடுகபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கும், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் புத்தரச்சல் ஏ.ஜி.அங்காளம்மாள் கோவிந்தசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் மாதப்பூர். வே.கள்ளிப்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது.

இதுபோல் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளகோவில் சுபஸ்ரீ மஹாலில் வேலம்பாளையம் வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சிகளுக்கும், பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் வடுகபாளையம்புதூர் சரஸ்வதி மஹாலில் வடுகபாளையம்புதூர் சித்தம்பலம் ஆகிய ஊராட்சிகளுக்கு முகாம் நடைபெறவுள்ளது.இம்முகாமில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகள் வாயிலாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படவுள்ளது. எனவே இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனு கொடுத்து தீர்வு காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வெள்ளகோவில், பல்லடம் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Vellakovil, Palladam ,Tirupur ,Collector of ,Christaraj ,Uthukuli Panchayat Union ,Uthukuli ,RS Uthukuli Union Marriage Hall ,Damampalayam ,Pallavarayanpalayam ,S. Kathanganni ,Ichipalayam ,Vadukapalayam ,
× RELATED இலவச வீட்டுமனை பட்டாவிற்கு நிலம்...