×

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் தலையில் கல்லைப் போட்டு கார் டிரைவர் கொலை: 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

கேடிசி நகர்: நெல்லை முன்னீர்பள்ளம் அருகே தருவை ஆலங்குளத்தைச் சேர்ந்த இருதய நவமணி மகன் தங்கப்பாண்டி (21). கார் டிரைவர். கடந்த டிச.12ம்தேதி இவர் அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 சிறுவர்கள் மற்றும் வாலிபர் ஒருவர் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தனர். இதை அவர் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 2 சிறுவர்களும் மற்றும் வாலிபர் அகஸ்டின் என்பவரும் தங்கப்பாண்டியின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி தங்கப்பாண்டியை கல்லால் தாக்கியதாக அகஸ்டின் (26) மற்றும் 17 வயதுக்குட்பட்ட 2 சிறுவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு இறந்ததால், கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி முன்னீர்பள்ளம் போலீசார் பதிவு செய்தனர்….

The post செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் தலையில் கல்லைப் போட்டு கார் டிரைவர் கொலை: 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : KDC ,Nagar ,Cardiac Navamani ,Dangapandi ,Dharuva Alangulam ,Nellai Purperpallam ,Dinakaran ,
× RELATED பாமக மாஜி நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீச்சு