×

பைக் மீது தனியார் பள்ளி பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு: நத்தம் அருகே சோகம்

திண்டுக்கல்: நத்தம் அருகே தனியார் பள்ளி பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லிங்கவாடியை சேர்ந்தவர் முருகன். இவர் தன்னுடைய உறவினர் திருமணத்துக்ககா மனைவி, மகனுடன் நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மதுரை – நத்தம் சாலையில் முடக்குசாலை பகுதியில் இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி பேருந்து மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே முருகன் (40), அவரது மனைவி பஞ்சு, 6 வயது மகன் ஸ்ரீதர் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த கார் ஓட்டுனர் முருகனுக்கு மேலும் 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post பைக் மீது தனியார் பள்ளி பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு: நத்தம் அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Natham ,Murugan ,Lingawadi ,Natham, Dindigul district ,Dinakaran ,
× RELATED நத்தம் அருகே காதலியை ஏர் கன்னால் சுட்ட காதலன்