×

பாலத்தின் சுவரில் மோதிய பைக் ஓடைக்குள் விழுந்து மீனவர் பலி

ஸ்பிக்நகர், ஆக. 22: தூத்துக்குடியில் பாலத்தின் சுவரில் மோதிய பைக் ஓடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். பழையகாயல் அன்னை தெரசா காலனியை சேர்ந்த சேகர் மகன் ஜெரிசன் (24). மீனவரான இவர், கடந்த 18ம் தேதி இரவு வீட்டில் இருந்து பைக்கில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி – திருச்செந்தூர் ரோடு மதிகெட்டான் ஓடை பாலத்தில் வந்தபோது திடீரென பாலத்தின் சுவரில் பைக் மோதி ஓடைக்குள் விழுந்தது. இதில் பைக்குடன் விழுந்த ஜெரிசன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் மதிகெட்டான் ஓடையில் வாலிபர் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலையடுத்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், சடலமாக கிடந்தவர் ஜெரிசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்ட போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஓடையில் விழுந்துகிடந்த பைக்கையும் மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாலத்தின் சுவரில் மோதிய பைக் ஓடைக்குள் விழுந்து மீனவர் பலி appeared first on Dinakaran.

Tags : Spignagar, Aga ,Tuthukudi ,Jerison ,Chekar ,Old ,Kaya ,Mother Teresa ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி அருகே மீனவ கிராமத்தில்...