×

கோயில் இடங்களில் வீட்டு மனை கேட்டு தொடர் பிரச்சார இயக்கம்

 

கும்பகோணம், ஆக.20: கும்பகோணம் அருகே தாராசுரத்தில் மக்கள் முன்னணி விடுதலை சார்பில் கோயில் மனையில் பட்டா மற்றும் வீட்டு மனை கேட்டு தொடர் பிரச்சார இயக்கம் தொடங்கியது.கும்பகோணம் அருகே தாராசுரத்தில் மக்கள் முன்னணி விடுதலை சார்பில் கோயில் மனையில் பட்டா மற்றும் வீட்டு மனை கேட்டு தொடர் பிரச்சார இயக்கத்தை, அதன் நிறுவனத் தலைவர் மனோகரன் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார்.

மாவட்ட செயலாளர் ஈஸ்டர் ராஜ், மாவட்ட குழுவினர் பாபு மற்றும் வீரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கோயில் நிலங்கள் மற்றும் அறநிலையத்துறை மற்றும் மடத்து இடங்களில் குடியிருக்கும் மக்களுக்கு உடனடியாக குடியிருப்பு மனை வழங்கிட வேண்டும் என்றும், அறநிலையத்துறை சம்பந்தமாக வாடகை கேட்டு அச்சுறுத்தும் நிர்வாகத்தை கண்டிப்பதுடன், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷமிட்டனர். தொடர்ந்து, இந்த பிரச்சார இயக்கம் கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.இந்நிகழ்வில், திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் செல்வமணி, வழக்கறிஞர் ஜெயபாண்டியன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

The post கோயில் இடங்களில் வீட்டு மனை கேட்டு தொடர் பிரச்சார இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,People's Front Liberation ,Tharasuram ,Tarasuram ,
× RELATED கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் ஆதார் சேவை செயல்பாடுகள் தீவிரம்