×

தீக்குளித்து வாலிபர் தற்கொலை

 

சிவகாசி, ஆக.20: மது போதைக்கு அடிமையான வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சிவகாசியில் மணிநகர் பகுதியை சேர்ந்தவர் காளிராஜன் மகன் பாண்டி(33). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அந்த பழக்கத்தில் இருந்து மீளமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பாண்டி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தீக்குளித்துள்ளார். உடலில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தீக்குளித்து வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Kalirajan ,Pandi ,Maninagar ,
× RELATED லாரி டிரான்ஸ்போர்ட்டில்...