×

தேவகோட்டையில் ஆக.21ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

சிவகங்கை, ஆக. 19:மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:பொது மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கலெக்டர் உள்ளிட்ட மாவட்ட அனைத்து உயர் அலுவலர்களும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிவர்.

இதனடிப்படையில் ஆக.21 அன்று ஒரு நாள் கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் தேவகோட்டை வட்டத்தில் இருப்பார்கள். தொடர்ந்து அன்று மாலை 4.30மணி முதல் 6மணி வரை தேவகோட்டை ராம் நகர் உள்ள தனியார் எஸ்.எம்.ஜி மஹாலில் பொதுமக்கள் மற்றும் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெறும். பொதுமக்கள் தங்களின் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேவகோட்டையில் ஆக.21ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Devakottai ,Sivagangai ,
× RELATED சுற்றுலா வேன்-கார் பயங்கர மோதல் தந்தை,...