×

தஞ்சை பெரியகோயிலுக்கு வந்தவர் மயங்கி விழுந்து பலி

 

தஞ்சாவூர், ஆக.17: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த வழுத்தூர் ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(45). இவர், தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு நேற்று வந்திருந்தார். அப்போது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள், அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து, முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, ராமகிருஷ்ணனை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

The post தஞ்சை பெரியகோயிலுக்கு வந்தவர் மயங்கி விழுந்து பலி appeared first on Dinakaran.

Tags : Tanjore Periyakoil ,Thanjavur ,Ramakrishnan ,Vaghtoor ,Papanasam ,Thanjavur district ,Thanjavur Periyakovil ,
× RELATED தஞ்சாவூர் அருகே அரசு பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது