×

ரூ.1 கோடி மதிப்புடைய நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது

சென்னை:  கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் வேணுகோபால். இவரின் மனைவி தேவிகா. இவர், தனக்கு சொந்தமான புத்தகரம், பெருமாள் நகரில் சுமார் ரூ.1 கோடி மதிப்புடைய காலி மனையை போலி ஆவணங்கள் மூலம் சிலர் ஆள்மாறாட்டம் செய்து அபகரிப்பு செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை அபகரித்த நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த வசந்தகுமார்(35), பெருமாள்பட்டு, அம்பேத்கர் தெருவை சேர்ந்த அண்ணாதுரை(54) ஆகிய இருவரும் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்….

The post ரூ.1 கோடி மதிப்புடைய நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Venugopal ,Kilpakkam ,Devika ,Boddhagaram, Perumal Nagar ,
× RELATED I.N.D.I.A கூட்டணி கட்சித் தலைவர்கள் மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையர்கள் சந்திப்பு..!!