×

நெல்லையில் பேருந்துகளில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பக் கூடாது: தனியார், அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

நெல்லை: நெல்லையில் பேருந்துகளில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பினால் ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல் துணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நெல்லையில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுடன் காவல்துறையினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அப்போது, திருநெல்வேலி மாநகர பஸ்களில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெல்லையில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்களிடையே சாதி ரீதியான மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், சாதிய மோதல்களை தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீறி சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பு செய்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் காவல் துணை ஆணையர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பங்கேற்றனர்.

The post நெல்லையில் பேருந்துகளில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பக் கூடாது: தனியார், அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nella ,Paddy ,
× RELATED ரவுடிசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்: டிஜிபி சங்கர் ஜிவால்