×

திருப்பதி எம்.ஆர்.பள்ளியில் காவலர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்-எஸ்பி தொடங்கி வைத்தார்

திருப்பதி : திருப்பதி எம்.ஆர்.பள்ளியில் நேற்று காவலர்களுக்கான விளையாட்டு போட்டிகளை எஸ்பி வெங்கட அப்பல நாயுடு கொடியேற்றி தொடக்கி வைத்தார்.  ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி காவல்துறை சார்பில் காவலர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் எம்.ஆர்.பள்ளியில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டி நாளை வரை நடைபெற உள்ளது. திருப்பதி மண்டலத்தில் உள்ள கிழக்கு, மேற்கு, அலிபிரி, ரேணிகுண்டா, காளஹஸ்தி உள்ளிட்ட காவல் நிலைய காவலர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். இதில், ஓட்டப்பந்தயம், கைப்பந்து, நீளம் தண்டாதுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், மட்டைப்பந்து, கபடி, டென்னிஸ், பேட்மிட்டன் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது. போட்டியை எஸ்பி வெங்கட அப்பல நாயுடு கொடியேற்றி தொடக்கி வைத்தார். மேலும், சமான புறாவையும் பறக்க விட்டார். அப்போது, எஸ்பி பேசுகையில், ‘காவல்துறையினர் ஆரோக்கியமாக உடலை வைத்து கொள்ள உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு அவசியம். காவல்துறையில் பணிச்சுமை காரணமாக காவலர்கள்  மன அழுத்தத்தில் உள்ளனர். இதனை போக்கவும், இலகுவாகவும், ஆரோக்கியமாகவும் சக ஊழியர்களுடன் நட்புணர்வுடன் இருக்க விளையாட்டு போட்டிகள் பயனுள்ளதாக அமைகிறது’ என்றார்.இதில், கூடுதல் எஸ்பி சுப்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….

The post திருப்பதி எம்.ஆர்.பள்ளியில் காவலர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்-எஸ்பி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tirupati MR School-SP ,Tirupati ,SP ,Venkata Appala Naidu ,MR School ,Tirupati M.R. School ,
× RELATED மாணவர்களின் உயர்கல்வி கனவிற்கு...