×

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை

டெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் -ஓகா, ஜார்ஜ் மஸி அமர்வு விசாரித்தது வருகிறது. அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரியிருந்தார்.

The post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,minister ,Senthil Balaji ,Delhi ,Former minister ,Justices ,Abhay-Oga ,George Massey ,Enforcement Department ,
× RELATED ஹேக் செய்யப்பட்ட உச்சநீதிமன்றத்தின்...