×

சுதந்திர தினத்தை ஒட்டி டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

சென்னை: சுதந்திர தினத்தை யொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
சுதந்திர தினத்தினை ஒட்டி நாளை தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள், தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல்1) மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், எப்எல்3 உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்எல்3(ஏ), எப்எல்3(ஏஏ) மற்றும் எப்எல்11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்படும். அன்றைய தினம் (15ம் தேதி) மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

தவறினால், மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சுதந்திர தினத்தை ஒட்டி டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Independence Day ,Chennai ,Yoti Tasmak ,District Collector ,Rashmi Siddharth Jagade ,Tasmak ,Dinakaran ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் 8 மணிநேர வேலை...