×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனுக்கு 4 நாள் போலீஸ் காவல்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரனின் மகனும், முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியுமான அஸ்வத்தாமனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு செய்தனர். இந்த மனு, எழும்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் 5வது நீதிமன்ற நீதிபதி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அஸ்வத்தாமனை 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதுப்பேட்டையில் உள்ள ரவுடிகள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அஸ்வத்தாமன் அழைத்துச் செல்லப்பட்டார்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனுக்கு 4 நாள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.

Tags : Aswathaman ,Armstrong ,CHENNAI ,Egmore court ,Rowdy Nagendran ,Congress ,Egmore Criminal Justice Division 5th Court ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது...