×

போலி ஆவணம் தயாரித்து ரூ.1.25 கோடி நிலம் மோசடி: பெண் உட்பட 2 பேர் கைது

ஆவடி: அம்பத்தூர், மௌனசாமி மேடம் சாலையில் வசிக்கும் சேரன் (57) என்பவர், கடந்த 29ம் தேதி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதில், கூறியிருப்பதாவது, திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி தாலுகா, அலமாதி கிராமத்தில் 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை 12.9.2003 அன்று முனியாண்டி என்பவரிடமிருந்து வாங்கி, பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் பெற்றேன். கடந்த வருடம் மே மாதம் 11ம் தேதி, மேற்படி இடத்தில் சிலர், அத்துமீறி நுழைந்தனர்.

பின்னர் வில்லங்க சான்று போட்டு பார்த்தபோது, கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த வசந்தி என்பவர், கடந்த 4.5.2023 அன்று நான் அவருக்கு நிலத்தை செட்டில்மென்ட் செய்ததாக ஒரு போலி ஆவணம் தயார் செய்துள்ளார். பின்னர் அதே தேதியில் பிரபு மற்றும் அருண் ஆகியோருக்கு கிரையம் செய்தும் கொடுத்துள்ளார். அதற்கு சாட்சிகளாக ரூபன் மற்றும் பால்துரை ஆகியோர் கையொப்பம் செய்துள்ளனர். இந்த நிலத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.25 கோடி ஆகும். எனக்குச் சொந்தமான இடத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரித்த மேற்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருத்தார்.

இதனை தொடர்ந்து, ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் மற்றும் காவல் துணை ஆணையாளர் பி.பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் பொன்.சங்கர், ஆய்வாளர் வள்ளி தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தலைமறைவாக இருந்த கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த வசந்தி (58) மற்றும் போலி கையெழுத்து போட்ட கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சுரேந்தரன் (51) ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

The post போலி ஆவணம் தயாரித்து ரூ.1.25 கோடி நிலம் மோசடி: பெண் உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Avadi ,Cheran ,Maunaswamy Madam Road, Ampathur ,Avadi Central Crime Branch ,Alamathi village ,Ponneri taluka ,Tiruvallur district ,
× RELATED தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி வியாபாரி பரிதாப பலி