×

திருவண்ணாமலை சம்பவம் எதிரொலி: தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் குளிர்பான ஆலைகளில் சோதனையிட உத்தரவு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை சம்பவம் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் குளிர்பான ஆலைகளில் சோதனையிட உத்தரவிடப்பட்டுள்ளது. 10 ரூபாய் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் இவ்வாறு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். காலாவதியான குளிர்பானங்கள் விற்கப்பட்டால் கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலை சம்பவம் எதிரொலி: தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் குளிர்பான ஆலைகளில் சோதனையிட உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Tamil Nadu ,Tiruvannamalai ,Tiruvannamalai incident ,Food Safety ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 9.26 லட்சம்...