×

பைக் வாங்கி தராததால் தூக்குபோட்டு வாலிபர் சாவு

பண்ருட்டி, ஆக. 9: பண்ருட்டியை அடுத்த மேல்மாம்பட்டு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் மனைவி வளர்மதி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன் உள்ளனர். இளைய மகன் மாதவன்(24), பிட்டர் வேலை செய்து வந்தார். இவர் தனது தாயிடம் நேற்று முன்தினம் இரவு பைக் வாங்கி தர சொல்லி கேட்டுள்ளார். அதற்கு அவர் வாங்கி தர இயலாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த மாதவன், வீட்டில் தூக்கு போட்டு உயிரிழந்தார். இதுகுறித்து, காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் வாங்கி தராததால் தூக்குபோட்டு வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Tags : Panruti ,Ayyappan ,Varamathi ,Mariyamman Koil Street ,Madhavan ,
× RELATED பிரபல சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர...