×

அறந்தாங்கி அருகே காயக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி

அறந்தாங்கி,ஆக.9: அறந்தாங்கி அருகே காயக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பணியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் தொழுவங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட காயக்காட்டில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுசுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பள்ளி ஆசிரியர்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்து இருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் மெய்யநாதன், பள்ளி சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க நிதி வழங்கி சுற்றுச்சுவர் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உள்ளாச்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post அறந்தாங்கி அருகே காயக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Kayakadu Panchayat Union Primary School ,Aranthangi ,Minister ,Meiyanathan ,Arantangi Panchayat Union ,Government Panchayat Union Primary School ,Kayakad ,Thosluvangadu ,Panchayat ,Arantangi ,Dinakaran ,
× RELATED அறந்தாங்கியில் இருந்து சென்னைக்கு அரசு சொகுசு பேருந்து தொடக்க விழா